சுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’
சசி தரூர் தனது மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரண வழக்கில் சுப்ரமணிய சுவாமி ஆஜராவதற்கு எதிர்ப்பு
டெல்லி போலீசார் புலனாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயங்குவது ஏன்?
காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி...
இடதுசாரிகளிடம் இருந்து வசைமொழியை கற்றுக்கொள்க
ராஜீவ் மல்ஹோத்ரா டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு அதிகளவில் எதிர்ப்புகள் வரவும் அவர் அதை நீக்கிவிட்டார். அவருடைய கருத்தை முறையாகப் புரிந்துகொள்ளாமல் இடது சாரிகள் எழுப்பிய கண்டனக் குரல் கருத்துச் சுதந்திரத்தின் ஒடுக்குமுறையாக அமைந்துவிட்டது.
முன்...
புரட்டு செய்திகளின புகலிடமான இடதுசாரி ஊடகங்கள் பொய்களைப் பரப்புகிறது
இடதுசாரி புரட்டுச்செய்தி இணையதளம் ‘நியுஸ்லாண்டரி’ புரட்டு கருத்துகளை எப்படி திணிக்கிறது...
‘நியுஸ்லாண்டிறி’ புரட்டுச்செய்தி இணையதளம் என்பதற்கு எண் 1–4-லுள்ள ஆங்கில மேற்கோள்களை காண்க.
கேரள மாநிலத்தில் ஆட்சியிலுள்ள கட்சி இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆகும்....
உலக முதலீட்டார் மாநாடு பலனளிக்குமா?
வரும் 2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டார் மாநாட்டை சென்னையில் நடத்த தமிழக அரசு தற்போது ஆயத்தப்பணிகள் செய்து வருகிறது. இந்த மாநாட்டிற்காக 75 கோடிரூபாய் செலவு செய்யவும் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2015ம் வருடம் 100 கோடி ரூபாய் செலவில் உலக முதலீட்டார் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.
2015ம் வருட உலக முதலீட்டார் மாநாட்டில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய முதலீட்டாளர்களுடன் தமிழக அரசு ஒப்பந்தக் கையெழுத்திட்டதாககூறப்பட்டது. தற்போது மூன்று வருடத்த்pற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதலீடுகள் நடைமுறையில் அமல்படுத்தியிருக்க வேண்டும் அல்லது முடியும் தருவாயில் இருக்க வேண்டும். ஆனால் எந்த அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. அவ்வப்போது சில அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பினும் ஊர்ஜிதமான புள்ளிவிவரங்களுடன் கூடிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் 2015ம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டார் மாநாட்டினால் எந்தவிதமான பயன் ஏற்பட்டுள்ளது என்பது சந்தேகமாக உள்ளது.
2015ம் ஆண்டு உலக முதலீட்டார் மாநாட்டில், கடலூரில் 10000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வந்த நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் தொழில் அமைப்பு, அடிப்படை தொழில் திட்டமாக (anchor project) அறிவிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையை சார்ந்து பல சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் ஏற்படும் என்றுபெருமையாக பேசப்பட்டது. ஆனால், இன்று, இந்த தொழில் திட்டம் நலிவடைந்து, நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் திவாலா சட்டத்தின் கீழ் மூடப்படும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. தற்போது, அங்கு எந்தவிதமான கட்டுமான பணிகளும் நடக்கவில்லை.
2015ம் ஆண்டு உலக முதலீட்டார் மாநாட்டில், தூத்துக்குடியில் 15000 கோடி ரூபாய் முதலீட்டில், உரத்தொழிற்சாலையும், இயற்கை எரிவாயு இறக்குமதி மையமும்அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்த முன்வந்த மலேஷியா நாட்டின் தொழில் அதிபர் பாராட்டப்பட்டு, முக்கியத்துவம் கொடுத்துமாநாட்டில் பெருமைப்படுத்தப்பட்டார். ஆனால், இந்த மாபெரும் திட்டம் தற்போது என்னவாயிற்று என்றே யாருக்கும் தெரியவில்லை.
அவ்வப்போது உலக முதலீட்டார் மாநாட்டை நடத்துவது, ஒவ்வொரு மாநிலத்திலும், தற்போது ஒரு விளம்பர நிகழ்ச்சி போல் தான் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில்,முதலீட்டார்களுடன் கையெழுத்து இடப்படும் திட்டங்கள், தகுந்த ஆய்விற்கு பின் எடுக்கப்பட்ட முடிவல்ல. உத்தேச திட்டங்களாக தான் முன்மொழியப்படுகின்றன. இந்தமாநாடுகளுக்கு, முதலீட்டாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கப்பட்டாலும், முதலீட்டாளர்கள் நிலைமையை தீர விசாரித்து தான் முடிவெடுப்பர். பல உலகமுதலீட்டார் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 40 சதவீதம் கூட நிறைவேறுவதில்லை. தமிழ்நாட்டிலும் இதே கதிதான். இத்தகைய மாநாடுகளில்பதவியிலிருக்கும் முதல்மந்திரிகளுக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதே முக்கியமான குறிக்கோளாக கருதப்படுகிறதா என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது பல தொழில் திட்டங்கள் தடைபடுத்தப்பட்டு முடங்கிய நிலையில் உள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையம், போராட்டக்காரர்களின் எதிர்ப்பால், பல வருடங்கள் தடைபட்டு, அதன் பின்தான் தொடங்கியது. நெடுவாசலில் கச்சா எண்ணெய் எடுக்கும்திட்டம் எதிர்ப்பினால் கைவிடப்பட்டு விட்டது. விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும உதவக்கூடிய நியூட்டிரினோ திட்டம் தீவிரமாக எதிர்க்கபடுகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொளச்சல் துறைமுக திட்டமும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் தடைபட்டுள்ளது. சேலம் - சென்னை நெடுஞ்சாலை திட்டமும் தற்போதுதீவிரமாக எதிர்க்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து கொண்டிருந்த, 3000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்ட தூத்துகுடியிலுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுனமும், வன்முறை போராட்டத்தினால் மூடப்பட்டு உள்ளது. சுற்றுப்புற சூழலுக்கு ஸ்டெர்லைட் ஆலை பாதகம் ஏற்படுத்தவில்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம்கூறினாலும,; போராட்டக்காரர்களின் கை ஓங்கி, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணையிட்டது.
சமீபத்தில், பிலிப்ஸ் கார்பன் என்ற பிரபலமான நிறுவனம்,தமிழ்நாட்டில் அமைப்பதற்கு அறிவிக்கப்பட்ட கார்பன் பிளேக் (carbon black) தொழில் திட்டத்தை வேறுமாநிலத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் தொழிற்சாலை அமைக்க ஒவ்வாத நிலையே இத்தகையஎண்ணத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
தங்களை சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்வோரும், சமூக ஆர்வலர்கள் என்று வர்ணித்துக்கொள்வோரும் தமிழ்நாட்டின் பல தொழில் மற்றும் வளர்ச்சிதிட்டங்களை எதிர்க்கின்றனர். இவர்களுக்குள் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளதாக வலிமையான சந்தேகம் பலருக்கும் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, நடந்த வன்முறை போராட்டத்தில் விஷமிகள், சமூக விரோதிகளின் பங்கு உள்ளது என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது, பிரதம மந்திரியே தமிழ்நாட்டில் தீவிரவாதிகளும், விஷமிகளும் தவறான பரப்புரை கூறி, மக்களை திசை திருப்பி ஆக்கபூர்வமான திட்டங்கள் எதையும்செயல்படுத்தவிடாமல் தடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
தொழில் நிறுவனங்களின் எதிர்காலமும், விதியும், வீதிகளில் தீர்மானிக்கப்படும் என்ற நிலை இருப்பின. தொழில் முனைவோருக்கு முதலீடு செய்வதற்குஆர்வமும்,துணிவும் எப்படி ஏற்படும் ? தொழில் நிறுவனங்கள் அமைதியானமுறையில் செயல்பட முடியும் என்ற நிலைமையை உறுதி செய்யாமல், உலக முதலீட்டார்மாநாட்டை கூட்டுவது விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலை.
இத்தகைய நடப்பு நிலையை கருத்தில் கொள்ளாமல், தமிழக அரசு உலக முதலீட்டார் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்கிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
தொழில் முனைவோர் முதலீடு செய்வதற்குள்ள வாய்ப்புகளை எப்போதும் கூர்ந்து நோக்கிக் கொண்டு தான் இருப்பர். ஆக்கபூர்வமான சூழ்நிலையும், தக்கமுறையில்சந்தை வாய்ப்புகளும் உள்ள நிலையில், தொழில் முனைவோர் தாங்களாகவே தொழில் அமைக்கவும், முதலீடு செய்யவும் முன்வருவர்.
மாநில அரசு தொழில் திட்டங்களை ஊக்குவிப்பதில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில்முனைவோர்களின் கூட்டத்தை நடத்துவது சரியான அனுகுமுறைதான். ஆனால், தொழில் நடத்த ஏதுவான நிலைமையை ஏற்படுத்தாத நிலையில், தடியெடுத்தவன்தண்டல்காரன் என்ற சூழ்நிலையுள்ள போது, உலக முதலீட்டார் மாநாடு தேவையா என்று கேட்பதில் தவறில்லை.
வருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி
இயக்குனர் பதவி மற்றும் 154 கோடி வருமானம் போன்றவற்றை மறைத்ததற்காக வருமான வரி துறை தொடுத்த வழக்கில் சோனியா காந்தி இப்போது சிக்கியுள்ளார். வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்கான பின்விளைவுகளை...
ராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் மற்றும் சோனியாவின் பெயர் களங்கப்படும் அளவிற்கு ஆதாரங்கள் குவிகின்றன
2011 - 12 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று...
பொன் மாணிக்கவேலைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறதா?
கோயில் சிலை கடத்தலில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட பிரமுகர்களையும் ஊழல் செய்யும் அதிகாரிகளையும் கைது செய்த ஸ்டார் அதிகாரியான பொன். மாணிக்கவேலை தமிழக அரசு அப்பொறுப்பில் இருந்து விலக்கியுள்ளது
பொன். மாணிக்கவேல் தமிழகத்தின் நேர்மையான அதிகாரிகளில்...
குழந்தைகளின் மனித உரிமையையும் வாழ்வுரிமையையும் நசுக்கும் கிறிஸ்தவ சோனியாவின் சட்டம்
சாதாரணமான சட்டமாக இயற்றப்படாமல் தேசிய சட்டமைப்பு சட்டத்திருத்த மசோதாவாக இயற்றப்பட்ட சட்டம் ‘தி ரைட் டு எஜூக்கேஷன் ஆக்ட்’ (கல்வி உரிமைச் சட்டம், the Right to Education Act, RTE). சட்டத்திருத்த...
சாதி ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையும் உருவாக்கியது கிறிஸ்தவ வெள்ளைக்கார ஆட்சி
புத்தக சுருக்கம்
புத்தகத்தின் பெயர்: அழகிய மரம்: 18ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
புத்தக ஆசிரியர்: காந்தியவாதி திரு தரம்பால் (1983)
தமிழில் மொழிப்பெயர்ததவர்: திரு பீ. ஆர். மகாதேவன் (2016)
வெளியீடு: தமிழினி, 67 பீட்டர்ஸ்...
அகமது படேல் ஸ்டெர்லிங் சந்தேசாரா குழுமத்திடமிருந்து நேரடியாகப் பணம் பெற்றார்: ஹவாலா ஏஜென்ட் ஜானி...
5000 கோடி ரூபாய் வங்கி ஊழல் பற்றி புலனாய்வு செய்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் ஸ்டெர்லிங் பயோ டெக் மற்றும் சந்தேசாரா குழுமத்திடம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அகமது படேலிடம் நேரடியாக...