தெலுங்கானாவை ஆளும் இதன் விளைவு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (TRS) ஒரு நாள் அதிகாலை பொழுதில் வில்லங்கமான பேச்சுகளை பேசியதாகக் குற்றம் சாட்டி சுவாமி பரிபூரணானந்தாவை ஆறு மாத காலத்துக்கு மாநிலத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. இவர் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சிஷ்யர். இந்த நிர்வாகப் போக்கை என்னென்று சொல்வது? இத்துடன் இன்னொரு நடிகரையும் இந்த அரசு வெளியேற்றியுள்ளது. ராமர் மற்றும் சீதை பற்றி வில்லங்கமாக பேசிய கத்திமகேஷ் என்ற நடிகரையும் வெளியேறும்படி உத்தரவு போட்டுள்ளது. இதற்கும் சுவாமி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை சுவாமியை மாநில அரசு வீட்டுச் சிறையில் வைத்தது. அவர் நாற்பது கிலோ மீட்டர் பாதயாத்திரை போவதாகத் திட்டமிட்டிருந்தார் அதை நிறுத்துவதற்காக இந்த வீட்டுச் சிறை உத்தரவைப் பிறப்பித்தது. அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக சொல்லி அவர் வீட்டைச் சுற்றியும் காவலர்களை நிறுத்தி வைத்தது. அது அவருக்கு தேவையில்லை என்று தெரிவித்த போதும் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்த சம்பவம் ஹிந்துக்களை சாமி பரிபூரணானந்தாவின் பின்னால் அணி வகுக்க செய்யுமா? இரண்டு வெவ்வேறு பிரச்சனைகளை ஒன்றிணைப்பதில் தெலுங்கானா அரசு மைனாரிட்டிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை காண முடிகிறது. இப்போது தான் ஆட்டம் தொடங்கியிருக்கிறது. கவனித்துக்கொண்டே வருவோம்.
<a href=”https://www.pgurus.com/telangana-govt-externs-swamy-paripoornananda-from-the-state-for-six-months/orderpage1/” rel=”attachment wp-att-47160″><img src=”https://www.pgurus.com/wp-content/uploads/2018/07/OrderPage1.jpg” alt=”Page 1 of Externment order on Swamy Paripoorananda” width=”696″ height=”953″ class=”size-full wp-image-47160″ /></a> Page 1 of Externment order on Swamy Paripoorananda
<a href=”https://www.pgurus.com/telangana-govt-externs-swamy-paripoornananda-from-the-state-for-six-months/orderpage2/” rel=”attachment wp-att-47161″><img src=”https://www.pgurus.com/wp-content/uploads/2018/07/OrderPage2.jpg” alt=”Page 2 of Externment order on Swamy Paripoorananda” width=”696″ height=”1071″ class=”size-full wp-image-47161″ /></a> Page 2 of Externment order on Swamy Paripoorananda